விளாத்திகுளம் அருகே அயன்செங்கல்படை கிராமத்தில் திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் மாநகராட்சி வார்டுகள் நகராட்சிகள் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் அப்பகுதியில் உள்ள பாஜக  நிர்வாகிகள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இதை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன் செங்கல்படை கிராமத்தில் பாஜக நிர்வாகி  சந்திரசேகர் தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுநடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவருக்கும் பெண்கள் உரிமை தொகை வழங்க வேண்டும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்,சட்ட ஒழுங்கு சீர்குலைவு,அத்தியாவசிய பொருட்கள், மின் கட்டணம், சொத்து வரி, வாகன பதிவு கட்டணம்,மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு மேகதாது அணை விவகாரம் , உள்ளிட்டவை தொடர்பான கண்டங்கள் கோசங்களை எழுப்பினர்.