தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர்-ராமசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த திருமேனி என்பவரின் மகன் சின்ன மாடசாமி, (34)சின்ன மாடசாமி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் ஆடுகளுக்கு குடில் அமைப்பதற்காக ஊறின அருகே உள்ள கண்மாய் கரையில் உள்ள பனைமரத்தில் ஏறி பனை ஓலை வெட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில்,சின்ன மாடசாமி பலத்த காயமடைந்தார்.இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் சின்னமாடசாமியை விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சின்ன மாடசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மாசர்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.