விளாத்திகுளத்தில் திமுக பாகமுகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்   அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.  மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக கழகத்தலைவர்   மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி,தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிபாக முகவர்களுக்கான (BLA-2) ஆலோசனைக்கூட்டத்தில்  மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி.கீதாஜீவன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.கூட்டத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு மார்கண்டேயன் அவர்கள் தலைமை வகித்தார். மேலும் கூட்டத்தில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C. ஜெயக்குமார், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு ,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி ,கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன்  மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்