கோவில்பட்டியில் பெருந்தமிழர் சங்கரலிங்கனார் 67வது நினைவுநாள் அனுசரிப்பு. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று உண்ணாநிலை போராட்டம் நடத்தி உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவப்படத்திற்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு அலுவலகத்தில் வைத்து மாலையணிவித்து புகழஞ்சலி செய்யப்பட்டது.நிகழ்விற்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினர் பொறியாளர் தவமணி மாலையணிவித்தார்.
நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின், நிர்வாகிகள் முனைவர். ஆ.சம்பத்குமார், கருப்பசாமி, கலைச்செல்வன், மக்கள் நீதிமய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவையின் நாஞ்சில் குமார், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அருள்தாஸ், பகத்சிங் ரத்ததான அறக்கட்டளையின் காளிதாஸ், வியாபாரிகள் சங்க பேரவையின் ஜாகீர் உசேன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டியில் பெருந்தமிழர் சங்கரலிங்கனார் 67வது நினைவுநாள் அனுசரிப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சாலையை விரிவுபடுத்த கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் சார்பில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.
அடுத்த
கிடாரிகுளம் கிராமத்தில் புரட்டாசி மாத பொங்கல் உற்சவவிழா!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026