மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம்.கோவில்பட்டி மங்கள விநாயகர் கோவிலில் ஆரம்பித்து கடம்பூர் வரை செல்லும் மந்தித்தோப்பு சாலையை பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்பவும் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்தின் காரணமாகவும், விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக  தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்திற்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். புனித ஓம் பள்ளியின் தாளாளர் லட்சுமணப் பெருமாள் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின், நிர்வாகிகள் முனைவர்.சம்பத்குமார், கலைச்செல்வம், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் முருகானந்தம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பொன்ஶ்ரீராம், மந்தித்தோப்பு ஊழல் எதிர்ப்பு இயக்கம் காந்திராஜ், ஜெய்பீம் அறக்கட்டளையின் தாவீது ராஜா, ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் பொன்னுதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் மாடசாமி, நகரச்செயலாளர் கருப்பசாமி, வழக்கறிஞர் பாபு, இசைக்கலைஞர் பிரபாகரன் ஐஎன்டியுசி ராஜசேகரன், பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர். ரவிக்குமார், மருதம் மாரியப்பன், காங்கிரஸ் சிறுபான்மைப்பிரிவு அருள்தாஸ், கட்டிடத் தொழிலாளர் சங்கத்தலைவர் உத்தண்டராமன், ஆகியோர் கலந்துகொண்டனர்.நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.