தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள், தூத்துக்குடி ஆவுடையார்புரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மதன்குமார் (20, மற்றும் அண்ணா நகர் பகுதி முனியசாமி என்பவரது மகன் சந்துரு (20), மற்றும்அரவிந்த்(19) ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.