தூத்துக்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையத்தில் உதிரி பாகங்கள் வைக்கப்பட்ட அறையை துளையிட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 690 கிலோ குப்ரோ நிக்கல் பைப்புகள் படகுமூலம் கடல் வழியாக 15க்கும் மேற்பட்ட கும்பல் இரண்டு நாட்கள் தங்கி கடத்தல்:  நான்கு ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கடத்தல் கும்பலை கைது செய்ய காவல்துறை தீவிரம்.

தூத்துக்குடியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையம் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  அனல் மின் நிலையத்தில் 24 மணி நேரமும் தனியார் நிறுவன செக்யூரிட்டி ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அனல் மின் நிலையத்தில் உள்ள பொருள் வைப்பு அறையில் அனல் மின் நிலையத்திற்கு தேவையான பல கோடி ரூபாய் மதிப்புள்ள காப்பர் மற்றும் நிக்கல் கலந்த குப்ரோ நீக்கல் பைப் உள்ளிட்ட பல்வேறு உதிரி பாகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொருள் வைப்பு அறையில் கடந்த ஒன்பதாம் தேதி படகுமூலம் வந்து துளையிட்டு அதிலிருந்து  690 கிலோ எடை கொண்ட 829 எண்ணிக்கையிலான  குப்ரோ நிக்கல் பைப்உள்ளிட்ட விலை உயர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புடைய உதிரிபாகங்களை இரண்டு நாட்கள் பத்தாம் தேதி வரை அங்கேயே இருந்து கடல் வழியாக படகு மூலம் 15-க்கு மேற்பட்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளது.  இதுகுறித்து தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள் எந்தவித புகார் அளிக்காமல்  இந்த திருட்டு சம்பவத்தை மறைப்பதற்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ,இரண்டு நாட்கள் கழித்து அனல் மின் நிலைய ஊழியர்களுக்கு இந்த கடத்தல் சம்பவம் தெரிய வர அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்அனல் மின் நிலைய நிர்வாகம் பொருள் வைப்பு  அறையை கண்காணிக்கும் ஊழியர்கள் நான்கு பேரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.  மேலும் இது தொடர்பாக தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .இதைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும்மின் வாரிய லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.  அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உதிரி பாகங்கள் திருடு போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.