விளாத்திகுளம் அருகே புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணியை  MLA மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  வீரப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6-லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.



 இந்நிகழ்வில்  புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து  விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் வீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுசிலாராணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் துரைப்பாண்டியன் ஒன்றிய பிரதிநிதி ரவிச்சந்திரன் ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கணேசப்பாண்டியன் ஒன்றிய குழு உறுப்பினர் பரமேஸ்வரி கிளைச் செயலாளர்கள் ஜெயக்குமார், மாரீஸ்வரன் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.