தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் ஸ்ரீ முனியசாமி, ஸ்ரீ பெத்தநாச்சி அம்மன் திருக்கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் சமுதாய மக்கள் சார்பாக 46வது ஆண்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும்  ஓட்டிவந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.