விளாத்திகுளம் அருகேஅரியநாயகிபுரம் கிராமத்தில்  ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிட கட்டுமான பணியை விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் நான்கு வகுப்பறைகள் கட்டிட கட்டுமான பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டில் பூமி பூஜை செய்து கட்டுமான பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள். விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, கட்சியை நிர்வாகிகள் தொண்டர்கள் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.