41 நாட்கள் பயணம் கொண்டு
நிலவை நெருங்கிய சந்திரன் -3 விண்கலம் நிலவில் கால் பதித்ததையொட்டி,இந்திய பிரதமர்
நரேந்திர மோடி உட்பட இந்தியா முழுவதும்
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என உற்சாகமாக கேக் வெட்டி,,இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து
கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு
பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் மகாகவி பாரதியார் பேருந்து நிலையம்
முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தூத்துக்குடி
வடக்கு மாவட்டச் செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில், சமூக
ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள்
பொதுமக்கள் என ஏராளமானோர் கேக் வெட்டி
உற்சாகமாக சந்திரயான்-3 வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்,
அதனைத்
தொடர்ந்து எட்டையாபுரம் காவல் நிலையத்தில்
உள்ள காவலர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து எட்டையாபுரம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இந்தியா
எட்டையாபுரத்தில் பாஜகவினர் ,கல்லூரி மாணவ மாணவிகள் கேக் வெட்டி கொண்டாட்டம்!
Admin
1 நிமிட வாசிப்பு