தமிழ்நாடு முழுவதும் இன்று முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் கோடாங்கிபட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.
அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அப்பள்ளியின் சமையலரை பார்த்து, "எங்க சாப்பிடுறீங்க நீங்க.... நீங்க இங்கதான் சாப்பிடனும்...நீங்க முதல சாப்பிட்டதுக்கு பிறகுதான் குழந்தைகளுக்கு கொடுக்கனும்.." என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறினார்.
மேலும் பள்ளி குழந்தைகளுக்கு நன்கு சத்தான உணவுகளை வழங்கி அவர்கள் உண்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்களிடம் கூறிச் சென்றார். இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், உணவுகளை பரிமாற...சிரித்த முகத்துடன் குழந்தைகள் உணவை சாப்பிட்டனர்.
Vilathikulam
"முதல நீங்க சாப்பிடுங்க...அப்புறம் குழந்தைகளுக்கு கொடுங்க..." - பள்ளி சமையலருக்கு எம்.எல்.ஏ ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சந்தரயான்-3 விண்கலம் வெற்றியடைந்ததை தொடர்ந்து புதூரில் பாஜகவினர் கொண்டாட்டம்!
அடுத்த
சந்திராயன்-3 வெற்றி: முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய பாஜகவினர்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026