விளாத்திகுளம் அருகே தரமற்ற ரேஷன் அரிசி வழங்கியதை கண்டித்து:நியாய விலைக் கடை முன்பு பொதுமக்கள் அரிசியை தரையில் கொட்டி போராட்டம். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக நியாய விலை கடையில் தரமற்ற முறையில் ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வருவதாகவும்,
இதுகுறித்து பலமுறை அக்கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அரிசி மிகவும் பெரிதாகவும்,தரமற்ற முறையில் இருப்பதாகவும் கூறி கிராம மக்கள் நியாய விலைக் கடை முன்பு தரையில் அரிசியை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் முறையாக மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர். அதேபோல் நியாயவிலைக் கடையில் பணியாற்றும் பணியாளர் கன்னியம்மாளின் கணவர் தம்பிராஜன் என்பவர் நியாய விலை கடைக்கு வரும் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் பேசியும், கடுமையாகப் பேசுவதும் தொடர் கதையாக உள்ளது என்று அக்கிரம மக்கள் கூறுகின்றனர். எனவே அரசு தரமான அரிசியை வழங்க வேண்டும் மற்றும் நியாய விலைக் கடையில் பணிபுரியும் கண்ணியம்மாள் மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கிரம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Vilathikulam
தரமற்ற ரேஷன் அரிசி வழங்கியதை கண்டித்து அரிசியை தரையில் கொட்டி மக்கள் போராட்டம் .
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பனிமய மாதா பேராலய தங்க தேர் திருவிழா-மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு திருப்பலி !
அடுத்த
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026