விளாத்திகுளம் அருகே எட்டயபுரம் அரசு
மருத்துவமனையில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி
மாவட்டம் கோவில்பட்டி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் டாக்டர்.ஜெகவீரபாண்டியன் என்ற
குணசேகரன் உத்தரவின்படி கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு அரசு மருத்துவமனை
தலைமை மருத்துவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.மருத்துவ அலுவலர் அஜய் முன்னிலை
வகித்தார்.இந்தமுகாமில் தொழுநோய் எப்படி பரவுகிறது,தொழுநோய் பற்றிய ஆரம்ப அறிகுறிகள் மற்றும்
தொழுநோய் சிகிச்சைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது.மேலும் அதை தடுக்கக்கூடிய வழிமுறைகளையும்
எடுத்துக் கூறி துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.
Vilathikulam
தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் பொன்னூஞ்சல் தாலாட்டு!
அடுத்த
மழைநீருடன் கழிவுநீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்ததுகால்நடைகள் உயிரிழந்து துர்நாற்றம்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026