தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதல் ஏற்பட்ட போது வேம்பார் கிராமத்தில் கடற்கரையில் வசித்து வந்த 30 முத்தரையர் இன குடும்பங்களை அரசு தற்காலிகமாக சுனாமி குடியிருப்பில் குடிசை வீடுகளில் தங்க வைத்தது. தொடர்ந்து அந்த பகுதியில் சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டிய போது 13 குடும்பங்களுக்கு வீடு வழங்கினார்கள். மீதமுள்ள 20 குடும்பங்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை.
குடிசை வீடுகள் சேதமடைந்துவிட்டன. எங்கள் வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் வசதி கிடையாது. நாங்கள் மிகவும் வறுமை நிலையில் இருக்கிறோம். குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை. எனவே, அரசு எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் எங்களை கருணை கொலை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடி
எப்போது விடிவு காலம் பிறக்கும்? வேம்பார் சுனாமி குடியிருப்பு மக்கள் எதிர்பார்ப்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெருமுனை கண்டன கூட்டம்!
அடுத்த
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026