விளாத்திகுளம் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் - சீறிப்பாய்ந்த  37 ஜோடி மாடுகள்!  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வீர காஞ்சிபுரம் கிராமத்தில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் ஆனி கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது,பூஞ்சிட்டு,சிறியமாடு என இரு பிரிவுகளாக  நடைபெற்ற போட்டியில், திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 37  மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு  சீறிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.