தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில்  மாட்டு வண்டி மூலம் மணல் திருட்டு செய்பவர்களிடமிருந்து  ரூபாய் 25000  லஞ்சம் வாங்கியது தொடர்பாக சங்கரலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாரி மற்றும் தனிப்பிரிவு காவலர் செல்வகுமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் காவல் நிலையத்தில் வைத்து லஞ்சம் வாங்கியது தொடர்பாக பெண் உதவி ஆய்வாளர் முத்துமாரி மற்றும் தனிப்பிரிவு காவலர் செல்வகுமார் ஆகியோரை முழுமையான விசாரணை முடியும் வரை பணியிடை நீக்கம் செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.