நாளை சுப முகூர்த்த தினம் என்பதால் தூத்துக்குடி பூச்சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்வு 200 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ பிச்சிப்பூ 600 ரூபாய்க்கு விற்பனை ஊட்டி ரோஸ் கட்டு 250 ரூபாய்க்கு விற்பனை.நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் தூத்துக்குடி பூச்சந்தைக்கு ஓட்டப்பிடாரம் ,புதியம்புத்தூர், பேரூரணி ,அணியாபரநல்லூர், செட்டிமலம்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.ஆனால் பூக்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதன் காரணமாக பூக்களின் விலை உயர்ந்தது கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ மற்றும் பிச்சிப்பூ கிலோ 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகிறது.மேலும் கல்யாண மாலை கட்ட பயன்படும் ரோஜா பூ கட்டு 150 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக உயர்ந்துள்ளது.  சுப முகூர்த்த தினங்கள் தற்போது தொடர்ந்து வருவதால் பூக்களின் விலை தொடர்ந்து உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.