தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வள்ளிநாயகிபுரம்  கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட எம்.வெங்கடேஸ்வராபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய 15 வது நிதி குழுவில் இருந்து ,ரூபாய் 7 லட்சம் மதிப்பில்  புதிய கலையரங்கம் கட்டும் கட்டுமான பணியை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்  ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி, ஊராட்சி மன்ற தலைவர் தவசி அம்மாள்,கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.