அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுக்கையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குட்படட தந்தை பெரியார் நகரில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஊராட்சி தீர்வை ரசீது, குடிநீர் வசதி, வாறுகால், சாலை, மின்விளக்கு என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்பதால் அப்பகுதி பொது மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், போதுமான அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்;ட் கட்சியினர் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையெடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவினையும் வழங்கினர்.