தூத்துக்குடியில் உள்ள தமிழக அரசின் மின்வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 1வது அலகு பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 3வது அலகும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு. தூத்துக்குடியில் உள்ள தமிழக அரசின் மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின்நிலையம் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் 5 அலகுகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முறையாக பராமரிப்பு செய்யப்படாத காரணமாக அடிக்கடி அனல் மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இன்று அனல் மின் நிலையத்தின் 1வது அலகில் கொதிகலனில் ஏற்பட்ட பஞ்சர் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஏற்கனவே 3வது அலகில் பராமரிப்பு பணிக்காக நேற்று 16-7-23 இரவு முதல் 15 நாட்கள் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் அனல்மின் நிலையத்தில் சுமார் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மின்வெட்டு அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு காரணமாக மின்வெட்டு அதிகரிக்கும்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கீழஈரால் கிராமத்தில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
அடுத்த
தூத்துக்குடி சிவன் கோவில் தெருவில் மரக்கன்று நடும் பணி!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026