தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு உள்ள பேய்குளம் ஆறுமுகமங்கலம் பொற்கை உள்ளிட்ட குளங்களில் மூன்று மாதங்களுக்கு முன்பதாகவே தண்ணீர் இல்லாத காரணத்தால் அந்த பகுதியில் பயிரிடப்பட்ட ஆயிரக்கணக்கான வாழை உள்ளிட்ட பயிர்கள் கருகி வரும் நிலை உள்ளது மேலும் ஆடு மாடுகளுக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றது.    கடந்த ஆண்டு குறைவான அளவில் மழை பெய்து காரணமாக அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்த நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் நல்ல மழை பெய்து வருவதுடன் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கருகி வரும் நிலையில் உள்ள வாழை உள்ளிட்ட  பயிர்களை பாதுகாக்கவும் குடிநீர் இன்றி தவிக்கும் ஆடு மாடுகளை காப்பாற்ற பாபநாசம் அணையில் இருந்து திருவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது