தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் பொருத்துவதற்கான மாற்றுத்திறனாளிகள் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது சிவகாசியில் உள்ள அகில இந்திய மார்வாடி யுவா சங்கத்தினர் சார்பில் செயற்கை கால்கள் மற்றும் கைகளை செய்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வைத்து கை கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் செய்வதற்கு அளவீடு செய்யும்  முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 141 மாற்றுத்திறனாளிகளுக்கு அளவீடு செய்யப்பட்டு கை கால்கள் தயார் செய்யப்பட்டது இதை தொடர்ந்து செயற்கை கை கால்கள்  வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி  கலந்து கொண்டு கை கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கைகால்களை வழங்கினார்.