நாகலாபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் இயங்கி வரும் உமறுப்புலவர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.இவ்விழாவில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ-மாணவிகளிடம் தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி சிறப்புரையாற்றினார்.இதைத்தொடர்ந்து அங்கு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.இந்நிகழ்வில் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர், பயிற்றுநர்கள், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், தொழிற்பயிற்சி நிலைய மாணவ-மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.