தூத்துக்குடி மத்திய அரசு குற்றவியல் சட்டங்களில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதை கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட குற்றவியல் சட்டங்களில் இந்தி வார்த்தைகள் மற்றும் சமஸ்கிருத வார்த்தைகளை திணிக்க முயன்று வருகிறது இதற்கு தமிழக முழுவதும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களிள் ஈடுபட்டு வருகின்றனர்.தூத்துக்குடியில் மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் சமஸ்கிருத தினிப்பை கண்டித்து வழக்கறிஞர் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் வக்கீல் செங்குட்டுவன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் பிரபு வழக்கறிஞர் சங்க செயலாளர் மார்க்ஸ்,  மூத்த வழக்கறிஞர் அதிசய குமார்,  வழக்கறிஞர்கள் சதீஷ்குமார், ரமேஷ் பாண்டியன்,  அர்ஜுனன்,  ராஜேஷ், அசோக் குமார், மைக்கேல், ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.