தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பணிமய மாதா பேராலய 441 ஆண்டு திருவிழா மற்றும் 16 வது தங்கத் தேர் திருவிழா வருகிற ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்க தேர் பவனி நடைபெற உள்ளது. இந்த விழாவில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். என பேராலய அதிபர் குமார் ராஜா செய்தியாளரிடம் தெரிவித்தார்.தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பணிமயமாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்த ஆலயத்தின் 441 வது ஆண்டு பெருவிழா மற்றும் 16வது தங்க தேர் திருவிழா வருகிற  26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தூவங்குகிறது தங்க தேர்த்திருவிழாவை முன்னிட்டு தினமும் இந்தியா முழுவதும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள் பங்கு தந்தைகள் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர்.  மேலும் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்க தேர் திருப்பலியை  கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்த்தினாள் பிலிப் நேரி கலந்து கொண்டு திருப்பலி நடத்துகின்றனர். பின்னர் தங்கத்தேர் பவணியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் துவக்கி வைக்கிறார். மேலும் சுமார் 216 ஆண்டுகள் பழமையான தங்கத்தேர் இந்த ஆண்டு புதியதாக 53 அடி உயரத்திலும் ஜப்பான் நாட்டிலிருந்து வர அழைக்கப்பட்ட தங்க இலைகள் மற்றும் அமெரிக்கா நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அமெரிக்கா டைமண்ட்டால் அலங்காரம் செய்யப்பட்டு வருவதாக பேராலய அதிபர் குமாரராஜா தெரிவித்தார். தைத் தொடர்ந்து திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  பேட்டி- பேராலய அதிபர் -குமார ராஜா