தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவகத்தின் பூட்டை உடைத்து அலுவலகத்தின் உள்ளே இருந்த லேப்டப் மற்றும் முக்கிய ஆவணங்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி-யில்  மீளவிட்டான் 2-பகுதிக்கு உட்பட்ட கிராம நிர்வாக  அலுவலகமானது சிதம்பர நகர் 3-வது தெருவில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு கிராம நிர்வாக் அலுவலகத்தின் பூட்டினை உடைத்துள்ள மர்ம நபர்பகள் உள்ளே இருந்த லேப்டப் மற்றும் முக்கிய ஆவனங்கள் சிலவற்றை திருடி சென்றுள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடி சென்ற  குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.மேலும் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வரும் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கொள்ளையை தட்டிகேட்ட  கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டு சில மாதங்களை ஆன நிலையில் தூத்துக்குடி சிதம்பர நகரில் செயல்பட்டு வந்த  கிராம நிர்வாக அலுவலகத்தின் பூட்டினை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே இருந்த லேப்டப் மற்றும் முக்கிய ஆவங்களை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.