பகுத்தறிவாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈவேரா ராமசாமி அவர்களின் 145வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமனுத்து சமத்துவபுரத்தில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.நிகழ்வில்விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி,ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல் புதூர் மேற்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நலஅணி அமைப்பாளர் கணேசபாண்டியன்,எட்டையாபுரம் பேரூர் கழகத் துணைச்செயலாளர் மாரியப்பன் விளாத்திகுளம் சட்டமன்ற  தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.