தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி நகரம், இனாம்மணியாச்சி, ஆலம்பட்டி மற்றும் மந்தித்தோப்பு ஆகிய பகுதிகளில் இன்று (21.06.2023) மதுரை - தூத்துக்குடி இரயில்வே இருவழி அகலப்பாதை அமைக்கும் வகைக்கு நிலஎடுப்பு செய்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உயர்திரு. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்வில்   தனி மாவட்ட வருவாய் அலுவலர்  (இஸ்ரோ) திருமதி. மாரிமுத்து, கோவில்பட்டி வட்டாட்சியர் திரு.ராஜ்குமார் ஆகியோர் உள்ளனர்.