இராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் உள்ள தனி ஆயுதப்படை பயிற்சி மையத்தில் வைத்து இராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் இராணுவ, விமானம், கடற்படை பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் பயிற்சி நிறைவு பெற்றதையொட்டி இப்பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கடலோர காவல் படை ஏ.டி.எஸ்.பி பாலகிருஷ்ணன், மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், காவல்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் ஏராளமான கடலோர காவல் படை போலீசார் கலந்து கொண்டனர்.