தூத்துக்குடி திரவியபுரம் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மனைவி பாலசுந்தரி(56),தனது கணவர் உதயகுமாருடன் அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால அமர்ந்து செல்போன் பேசியபடி சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பாலசுந்தரி செல்போனை பறித்துச்சென்றனர், இதுகுறித்து பாலசுந்தரி அழைத்த புகாரின் பேரில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட தூத்துக்குடி டிஎன்டி காலனியை சேர்ந்த முத்துமாணிக்கம் மகன் மதன் (19),  மற்றும் ஸ்டாலின் ஜோசப் என்பவரின் மகன் ஸ்வீட்டன் ரிஜோ (20) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.