கடலாடி அருகே தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாநில அளவிலான மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் - 10 லட்ச ரூபாய்க்கான பரிசுப் போட்டி!ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா 61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு மாநில அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ஐந்து பிரிவுகளாக  நடைபெற்றது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்று வெற்றி பெற்ற  மாட்டு வண்டி பந்தய வீரர்கள் 10 லட்சம் ரூபாய் பரிசுகளை ரொக்க பணம் நினைவு பரிசு குத்துவிளக்கு ஆகியவற்றை பந்தய வீரர்கள் சென்றனர்.தலை சிறந்த சாரதிகளான கருப்புதுரை,கணபதி,கணேசன் ஆகியோர் மாடுகளை ஓட்டி வந்த வந்த காட்சிகளை காண சாலையின் இரு புறமும் நின்ற பார்வையாளர் கண்களுக்கு விருந்தளித்தது.