தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கன்னிமார் கூட்டம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு. மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது. சின்ன மாடு பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 31 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தகைய வழங்கி கௌரவிக்கப்பட்டது.