விளாத்திகுளம் அருகே புரட்டாசி மாத 3வது சனியை முன்னிட்டு  சீனிவாச பெருமாள்  மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு வழிபாடு! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  கீழ நம்பிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள  600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோவிலில் ,புரட்டாசி மாத மூன்றாம் சனியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி இதர தெய்வங்களுக்கு  பால், தேன், மஞ்சள், இளநீர் சீகக்காய், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண மலர்களால்  அலங்கரிக்கப்பட்டு, தீபாதாரணை மற்றும் மாவிளக்கு தீபாதாரணை கட்டப்பட்டது, இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.