தூத்துக்குடி நாளை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் தூத்துக்குடி உள்ள கிராம தேவதையான மேலூர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நாளை தசரா திருவிழா அம்மன் ஆலயங்களில் வெகு சிறப்பாக நடைபெறும் இதை ஒட்டி அதிகாலை முதல் அம்மன் ஆலயங்களில் தசரா திருவிழா கொடி ஏற்றப்படும் தூத்துக்குடியில் உள்ள மிகவும் பழமையான கிராம தேவதையான மேலூர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில், தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது, பின்னர் கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆலய வளாகத்தில் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நாளை காலை கொடி ஆலயத்தில் ஏற்றப்பட உள்ளது.