"அருட்பெருஞ்ஜோதி இறைப்பணிக்குழு" என்ற உழவாரப்பணி குழுவினர் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் உழவாரப் பணிகளை பல ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் உழவாரப் பணிகளை மேற்கொண்டனர். அதன்படி கோவில்களில், கருவறையில் உள்ள சுவாமி சிலைகள் உட்பட அனைத்து சிலைகளையும் சுத்தம் செய்தது மட்டுமன்றி கோவில் வளாகம் முழுவதிலும் இந்த உழவாரப்பணி குழுவினர் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். பின்னர் இறுதியாக தங்களது பணிகளை முடித்த பின் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டுச் சென்றனர்.