தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் குரு பூஜை விழா நடைபெற்றது  அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது, 7 மணிக்கு மேல் கணபதி பூஜை சங்கல்பம் கும்ப பூஜை கணபதி ஹோமம் குரு மூலமந்திர  ஹோமம் பூர்ண கூதி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது, ஜீவசாமாதி குரு சுப்பிரமணிய சுவாமிக்கு 21 வகையான மஞ்சள் மா பொடி திரவியம் பால் தேன் சந்தனம் பூர்ண கும்ப அபிஷேகம் , சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை சங்கரன் ஓதுவார் தலைமையில் லட்சுமணன் சுவாமி ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் ஆறுமுகம் பூஜை களை செய்தார்கள், இதில் சுப்பாராஜ்சங்கரேஸ்வரி, மாரியப்பன், கணபதி, அம்பலவாணன் , கனகராஜ், லட்சுமணன், ராஜகாந்தன்  மற்றும் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, கொடி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டது