விளாத்திகுளம் அருகே குளத்தூரில் ரூ.10 இலட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன்! தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சிகளுக்குட்பட்ட அண்ணாநகர் காலனி தெருவில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை விளாத்திகுளம் அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குளத்தூர் துணை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மாரிச்செல்வி பாலமுருகன் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.