இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும், .சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேருந்து நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் வ..உசிதம்பரனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர், நிகழ்வில் புதூர் ஒன்றிய பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.