தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 10 லட்சம் மதிப்புள்ள 1,200 கிலோ பீடி இலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல்; தப்பியோடிய இருவரையும் தேடும் பணி தீவிரம்,தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் கடல் அட்டைகள், கஞ்சா, புகையிலைப் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து, சமையலுக்கு பயன்படுத்தப்படும் விரலி மஞ்சள், பீடி இலைகள் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பாலம் அருகில் (28.06.2023) இன்று நள்ளிரவு 3 மணியளவில் சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக வந்த லோடு வேன் (Bolero pickup) வாகனத்தை நிறுத்தபோது வாகனம் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. பின்னர், போலீசார் விரைந்து சென்று தருவைகுளம் ECR சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது டிரைவர் மற்றும் மற்றொருவர் காட்டுப் பகுதியில் தப்பி ஓடியுள்ளனர்.
மேற்படி வாகனத்தை சோதனை செய்ததில் 40 மூட்டைகளில் 1,200 கிலோ பீடி பண்டல்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். பின்னர், வாகனத்தை போலீசார் கைப்பற்றி சிப்காட் காவல் நிலையம் கொண்டுவந்து, கைப்பற்றிய பீடி இலைகளை தூத்துக்குடி சுங்கத்துறை வசம் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
உலகம்
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 10 லட்சம் மதிப்புள்ள 1,200 கிலோ பீடி இலைகள் ?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மார்க்கெட் தலைவர் நீக்கிவிட்டதாக கூறி இயக்குனர் அமிர்தராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்?
அடுத்த
தூத்துக்குடியில் "மாமன்னன்" திரைப்படம்- திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு!
இதையும் படிக்கலாம்
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடல் வழியாக 30 கிலோமீட்டர் நீந்தி சாதனை படைத்த சிறுவர்,சிறுமிகள்!
06 May 2024
மனித உணவு சங்கிலியில் பாதி உணவுகளை தரும் மீனவர்களுக்கு: உலக மீனவர் தின வாழ்த்துக்கள்!
21 Nov 2023
குபேர பகவானுக்கு நாணய வழிபாடு !
09 Nov 2023
UNHCR & ஊடகவியலாளர்கள் அகதிகள் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது!
03 Nov 2023