விளாத்திகுளத்தில் பெண் தீ குளித்து தற்கொலை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சத்யா நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி விஜயலட்சுமி வயது 43 இவர் விளாத்திகுளம் பேரூராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் மருந்து தெளிக்கும் வேலை செய்து வந்தார், இவருக்கும் இவரது மகளுக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இதனையடுத்து நேற்று இரவு விஜயலட்சுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விஜயலட்சுமி மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் இன்று காலையில் விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார் மேலும் இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Vilathikulam
விளாத்திகுளத்தில் பெண் தீ குளித்து தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
படர்ந்தபுளி நடுநிலை பள்ளியில்"மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அடுத்த
அரிய வகை "நாணல் பூச்சி பவளப்பாம்பு" பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைப்பு!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026