தென்தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் "சித்திரைப் பெருந்திருவிழா" நாளை (ஏப்ரல் 12-ம் தேதி) காலை 9.00-10.15 மணிக்குள் திருக்கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 11 நாட்கள் நடைபெறவிருக்கும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா சிறப்பாக நடைபெறவுள்ளது. அதேபோன்று திருவிழாவில் முக்கிய நிகழ்வான சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் 9-ம் திருநாளான ஏப்ரல் 20-ம் தேதி இரவு 7.00 - 8.00 மணிக்குள் நடைபெறுகின்றது. அதேபோல் திருத்தேரோட்டம் 10-ம் திருநாளான வருகின்ற ஏப்ரல் 21-ம் தேதி மாலை 3.30 மணிக்கு கோலாகலமாக நடைபெறவிருக்கின்றது.  இவண்: திருக்கோவில் நிர்வாகம்...