வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து திமுக பிரமுகர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  உருளைகுடி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன். திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு  பாக முகவர்களுக்கு வருகின்ற தேர்தலில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் நாம் அனைவரும் தேர்தல் பணிகள் செய்ய வேண்டும் என்று  ஆலோசனைகளை வழங்கினார்.