தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிம்முர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அஜித் குமார் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சோலையப்பன் என்பவரின் மகன் கனகராஜ்(20) ஆகியோர் இருவரும் நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் இரு மாணவர்களும் தூத்துக்குடி தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கு சென்று விட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் நாகலாபுரம் கல்லூரிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது. விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி மணல் குவாரி அருகே லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானதில் அஜித் குமார் மற்றும் கனகராஜ் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து படுகாயம் அடைந்த இருவரையும் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
சாலை விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம்-5 வாகனங்கள் பறிமுதல்.
அடுத்த
தனது திருமணத்திற்கு மாட்டுவண்டி பந்தயம் வைத்து அசத்திய பந்தய வீரர் : 3-ம் பரிசை வென்ற புதுமாப்பிள்ளை!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026