தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பனை மரக்கல் விற்பனை செய்வதாக குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்துள்ளது, தகவலின் பேரில் குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார், கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, பனைமரக்கல் இறக்கி விற்பனையில் ஈடுபட்ட பெரியசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த சூசைமகன் அந்தோணி பாஸ்கர் (46), மற்றும் சூசைமணி என்பவரின் மகன் தேவராஜ்(50) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 25 லிட்டர் பனங்கல்லை பறிமுதல் செய்தனர்.