விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு எம்எல்ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை!சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 67வது நினைவு தினம் இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் தெரு உருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார், இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சியின் இளஞ்சிறுத்தை பாசறை ஆட்சி சடையாண்டி, ஒன்றிய பொருளாளர் வில்லான் ரெஸ்லி, திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் தொண்டர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அண்ணல் அம்பேத்காரருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
Vilathikulam
அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 67வது நினைவு தினம்!
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026