தூத்துக்குடி
மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக விவசாய நிலங்கள், கால்நடைகள், வீடுகள் ஆகியவை பெரிதும் சேதம் அடைந்து மக்களின் வாழ்வாதாரம் பெரிதும்
பாதிக்கப்பட்டது. நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
பாதிப்புக்கு ஏற்றார் போல் நிவாரண தொகை அறிவித்து, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மக்கள் பிரதிநிதி மூலமாக நிவாரண தொகை வழங்கப்பட்டு
வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வட்டத்துக்கு
உட்பட்ட பகுதிகளில் மழையால் சேதம் அடைந்த வீட்டின் உரிமையாளர்கள் 108 நபர்களுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் எட்டையாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து தலா பத்தாயிரம்
ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்வில் எட்டையாபுரம் வட்டாட்சியர்
மல்லிகா, எட்டையாபுரம்
பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், திமுக ஒன்றிய செயலாளர் நவநீதக் கண்ணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள்,
பொதுமக்கள் என
ஏராளமானுடன் இருந்தனர்.
Vilathikulam
மழை வெள்ள நிவாரணத் தொகை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வெள்ள நிவாரணத் தொகை 6000 வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
அடுத்த
40 ஆண்டுகளாக தூர்வாரப்படாத பொதுப்பணித்துறை கண்மாய் - ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026