விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரை கிராமத்தில் பாய் வியாபாரி மர்மமான முறையில் மரணம். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து கிராமத்தை சேர்ந்த கொம்பையா என்பவரின் மகன் கருப்பசாமி (45) ,கருப்பசாமி இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராக சென்று பாய் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் பாய் வியாபாரம் செய்வதற்கு விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரை கிராமத்தில் பாய் வியாபாரத்தை முடித்துவிட்டு சிந்தலக்கரை கிராமத்தில் உள்ள கல்யாண மண்டபத்தின் அருகே உள்ள வேப்ப மரத்தின் கீழ் படுத்து தூங்கியவர். தூங்கிய படியே இறந்ததாக சிந்தலக்கரை கிராம மக்கள் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து கருப்பசாமியின் உடலை மீட்ட எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார், எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கருப்பசாமி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
பாய் வியாபாரி மர்மமான முறையில் மரணம்?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தங்க நகைகளை அடகு வைத்து அதிக லாபம் தருவதாக கூறிய ஏமாற்றிய 2 பேர் கைது -பொதுமக்களே உஷார்...
அடுத்த
ராணுவ வீரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாரிச்சாமி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026