விளாத்திகுளம் அருகே காரில் எரிந்த நிலையில் ஆண் சடலம்?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் ஒரு சொகுசு காரில் சடலம் ஒன்று எரிந்து கொண்டிருப்பதாக குளத்தூர் காவல் நிலைய போலீசருக்கு தகவல் வந்துள்ளது, இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தினை பார்வையிட்ட ஆய்வு செய்தனர், இதனை அடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன், சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயசந்திரன் தலைமையில் 2 தனிப்படை அமைத்து இறந்தவர் யார்? எதற்காக கொலை செய்து இங்கே வந்து எரித்தனர் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இறந்த உடலை குளத்தூர் காவல் நிலைய போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
எரிந்த நிலையில் காரில் ஆண் சடலம்?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம்!
அடுத்த
மர்மமான முறையில் கார் டிக்கியில் ஒருவர் எரித்துப் படுகொலை : போலீசார் விசாரணை!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026