தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சென்னமரெட்டியபட்டி சோதனைச்சாவடியில், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடுதல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரையில் உள்ள அரசு யாழினி கதர் & பட்டு பவன் நிறுவனத்திலிருந்து சேலைகளை விற்பனை செய்வதற்காக அந்நிறுவனத்தின் ஊழியரான மதுரையைச் சேர்ந்த அடைக்கலராஜ் என்பவரின் மகன் ரோவினஸ் ஆரோக்கியசாமி (43) மதுரையில் இருந்து TN58 BH3997 என்ற வாகன பதிவெண் கொண்ட MARUTI SUZUKI EECO வாகனத்தில் விளாத்திகுளம் நோக்கி வந்துள்ளார். அப்போது சென்னமரெட்டியபட்டி சோதனைச் சாவடியில் கூடுதல் நிலையான கண்காணிப்பு குழுவினர் (தேர்தல்) ரோவினஸ் ஆரோக்கியசாமியின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் விற்பனைக்காக கொண்டு செல்லும் ரூ.15 லட்சத்து 69 ஆயிரத்து நூறு மதிப்புள்ள 185 சேலைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 185 சேலைகளை நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரிகள் பறிமுதல் செய்து விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் துணை வட்டாட்சியர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில்ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் உத்தரவின்படி, பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள் விளாத்திகுளம் அரசு சார்நிலை கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது...
Vilathikulam
ரூ.15 லட்சம் மதிப்புள்ள 185 சேலைகள் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாகன விபத்தில் ஒருவர் பலி.
அடுத்த
திமுக பாக முகவர்களுடன் ஆலோசனை நடத்திய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026